அபார்ட்மண்டில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இந்த 10 பொய்களை நம்ப வேண்டாம்..!


     புதிய ரியல் எஸ்டேட் விதிமுறையான ரீரா தூங்கிக் கொண்டிருந்த சொத்து விற்பனை சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளித்திருக்கிறது.

      உங்களில் சிலர் இப்போது ஒரு வீடு வாங்குவதைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கலாம். மேலும் விற்பனையாளர்களும் முகவர்களும் இலவச திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகளுடன் படையெடுத்துக் கொண்டிருக்கும் நேரம் இது. அவர்களது விற்பனை உச்சங்களை ஆராய்ந்து, உண்மைகளின் அடிப்படையில் ஒரு முடிவெடுங்கள். ஒரு கட்டுமானர் அல்லது சொத்து, மனை விற்பனையாளர் உங்களிடம் சொல்லும் முதல் விஷயம் சொத்து, மனை விலைகள் ஒருபோதும் வீழ்ச்சியடையவதில்லை என்பதாகும். இதர வார்த்தைகளில் சொல்வதென்றால் விலையைப் பற்றி யோசிக்காதீர்கள். முன்நோக்கி செல்லுங்கள் மற்றும் வாங்கிவிடுங்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள்.

          இந்த விஷயத்தில் முன்பே சொத்து வாங்கிய உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது பெற்றோர்களிடமிருந்து மெய்யறிவைப் பெறலாம். எது எப்படியிருப்பினும், முன்பு உண்மைகளாக இருந்தவை இப்போது அப்படி இல்லை. சொத்துக்களின் மற்ற பிரிவுகளைப் போலவே ரியல் எஸ்டேட்டும் ஏற்ற இறக்கக் காலங்களைக் கடந்து செல்கிறது. இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், பங்குச்சந்தை அல்லது தங்கம் போல இதில் செய்யும் முதலீடு எளிதில் ஆவியாகிவிடுவதில்லை. சில சந்தைகளில் கடந்த 1 முதல் 2 வருடங்களாகச் சொத்துவிலைகள் தேக்கமுற்றிருக்கிறது. உண்மையில் சில பகுதிகளின் விலைகள் வீழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. தொலைதூர பகுதிகளில் வீடு வாங்குவது விலை மலிவானதாக இருக்கலாம். 

             ஆனால் இதனால் இதர செலவுகளான, அலுவலகத்திற்கு நீண்ட தூர பயணங்கள், குழந்தைகளுக்கான பள்ளிகள், வார இறுதியில் ஷாப்பிங் செல்லுதல், சமூக உலாக்கள் போன்ற செலவுகளைக் கொண்டு வருகிறது. உடனடியாக வீடு கட்டி குடியேறத் திட்டம் இல்லையென்றால், சொத்திலிருந்து உயர்ந்த வாடகை கிடைக்கும் என்பது போன்ற முன்னிறுத்தல்களை நம்பாதீர்கள். எதிர்காலத்தில் ஒரு சொத்து எவ்வளவு வாடகையை ஈட்டித் தரும் என்பதை யாராலும் முன்கூட்டி கணிக்க முடியாது. சொத்துச் சந்தையில் திருத்தம் ஏற்பட்டால் கட்டுமானாரும் விலைகளைக் குறைப்பார் என்று அவசியமில்லை. ஒருவர் பணவீக்கத்தைக் கணக்கிட்டால் கடந்த வருடம் அல்லது அதற்கு முன்பு விலைகள் அதிகரித்திருந்தாலும் அது உண்மை நிலவரத்தில் திறம்படத் திருத்தம் செய்யப்படுகிறது. 

          அதே போல ஒரே சொத்தின் மீது கடந்த வருடத்தை விட அதிகத் தள்ளுபடிகள் உண்மை நிலவரத்தில் சொத்துகளின் மதிப்பில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகும். ஒரு புதிய செயல்திட்டத்தில் இரண்டு படுக்கை அறைகள் ஹால் மற்றும் சமையலறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் ரூ. 42 லட்சம் என்று விலை சொல்லப்பட்டால், அந்தப் பகுதியில் ரூ 50 லட்சத்திற்கு விலைபோகும் என்று சொல்லப்பட்டால் அது திருட்டா? உண்மையில் அப்படி இல்லை. செய்தித்தாள்களில் வரும் முழுபக்க விளம்பரங்கள் அந்த வீட்டுமனைத் திட்டத்தின் வசதிகள் மற்றும் சிறப்பம்ச்களைப் பற்றி நிறையப் பேசுகின்றன. 

           ஆனால் ஒரு முக்கியமான விவரத்தைத் தவற விடுகின்றனர் - அது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அளவாகும். ஜோன்ஸ் லாங் லாசல்லி என்ற சொத்து விற்பனை ஆலோசனையாளர் வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையில் நாட்டின் முதன்மை பெருநகரங்களில் குடியிருப்புகளின் அளவின் சராசரி குறைந்து வருகிறது என்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கட்டுமானர் குறிப்பிடும் விலைக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது என்பது மற்றொரு அடிப்படை விதிமுறையாகும். ஏனெனில் அங்கே வீட்டை கவனித்துக் கொண்டிருப்பதற்கான கட்டணங்களின் நீண்ட பட்டியலில் சேர்ந்தே இருக்கும். வாகனம் நிறுத்தும் இடத்திற்கு, க்ளப் உறுப்பினராவதற்கு, நீங்கள் விருப்பப்படும் அமைவிடத்தைப் பெறுவதற்கு போன்ற அனைத்திற்கும் சேர்ந்து கூடுதல் கட்டணங்களைச் செலுத்தவேண்டியிருக்கும். 

           குறிப்பிட்ட தொகையோடு இவை அனைத்தும் கூட்டப்படும். பெரும்பாலும் ஒவ்வொரு கட்டுமானாராலும் வாங்குபவர்களை வசீகரிக்கப் பயன்படுத்தப்படும் விருப்பமான தந்திரம் இது. அது என்னவென்றால் ஒரு கட்டுமானாரிடம் நீங்கள் யோசிப்பதற்கு நேரம் வேண்டும் என்று சொன்னால், உடனே அவர் இந்த வீட்டு மனைத் திட்டத்தில் பெரும்பாலும் அனைத்து வீடுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன மற்றும் விலைகள் விரைவில் திருத்தப்பட்டு விலையேற்றம் அடையப் போகிறது என்று கூறுவார். இன்று வாங்குபவர்களின் ஆர்வத்தைவிடக் கட்டுமானார்கள் விற்பதற்கு அதிகத் துணிச்சலாக இருக்கிறார்கள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022