பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஐகோர்டு தடை !


           பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த குஜராத் அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் விதித்த தடைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 


            அதேநேரத்தில், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் எந்த மாணவர்களையும் சேர்க்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து கடந்த மே 1ம் தேதி குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி குஜராத் ஐகோர்ட் தடை விதித்தது. இந்த உத்தரவு முறையற்றது எனவும், அரசியல்சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறியது. இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022